பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 42

265

 
  அன்னள் அளியள் என்னாது, மாமழை
இன்னும் பெய்ய ழுழங்கி,
மின்னும்; தோழி,என் இன்னுயிர் குறித்தே;'
 
 

குறுந்.216

 
என்னும் ஆசிரியத்துள் அவரே எனவும் யானே எனவும்,
  `உலகினுள்,
பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே, பிறழினும்
இருந்தகைய இறுவரையின் எரிபோலச் சுடர்விடுமே,
சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும், பிறழ்வின்றி,
உறுதகைமை உலகிற்கோர் ஒப்பாகித் தோன்றாதே'
 
 

- யா. கா. 45 மே.

 
என்னும் கலியுள் உலகினுள் எனவும்,
  `உலகே,
முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி ஒழுகுமென்ப;
அதனால்,
நற்றிறம் நாடுதல் நன்மை;
பற்றற யாவையும் பரிவறத் துறந்தே'
 
 

- யா. கா. 45 மே.

 
என்னும் வஞ்சியும் உலகே எனவும், அடிமுதற் கண்ணும்,
  `மாவழங்கலின் மயக்குற்றன -- வழி'  
 

- யா. கா. 45 மே.

 
என்னும் வஞ்சிஅடியுள் வழி என இறுதிக்கண்ணும் வந்தவாறு காண்க.
  இறுதியும் என்ற உம்மையால்,
`கலங்கழாஅலின் துறை கலக்குற்றன.'
 
 

- யா. கா. 45 மே.

 
என்னும் வஞ்சி அடியின் இடைக்கண் `துறை' என வருதலும் கொள்க.
     பொதுப்படக் கூறிய அதனால் சீரானும் அசையானும் அன்றிச்
  `சிறுகுடி யீரே சிறுகுடி யீரே'  
 

- கலி. 38

 
என அடியானும் கூன் வருதல் கொள்க. பிறவும் அன்ன. (42)