| `எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறைத்து ஒழுக்கலும், அடியொடு தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே.' | | | - அவிநயம் | | |
| `குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும் ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம் அசையும் சீரும் அடியும் எல்லாம் வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே.' | | | - நத்தத்தம் | | |
வாழ்த்தும் வசையும் ஆமாறு | 43 |
753. | வாழ்த்து மெய்வாழ்த்து இருபுற வாழ்த்துஎனப் போற்றல் வேண்டும்; வசையும்அவ் வகைத்தே. | | | | | |
இது வாழ்த்தும் வசையும் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : வாழ்த்து மெய்வாழ்த்தும் இருபுற வாழ்த்தும் என இரு வகைத்தாகப் பாதுகாத்து அறிதலை விரும்பும் ஆசிரியன்; வசையும் அவ்விரு வகையினை உடைத்தாம் என்றவாறு. வரலாறு : |
| `கார்நறு நீலம் கடிக்கயத்துள் வைகலும் நீர்நிலை நின்ற பயன்கொலோ? -- கூர்நுனைவேல் வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம்' | | | - யா. கா. 45 மே. | | |
என மெய்வாழ்த்தும், [உண்மையாக வாழ்த்துவது] |
| `பண்டும் ஒருகால்தன் பைந்தொடியைக் கோட்பட்டு வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான்; - தென்களந்தைப் பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால், வாமான்தேர் வையையார் கோ' | | | - யா. கா. 45 மே. | | |