பக்கம் எண் :

278

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

(முற்கு - முக்குதல் ; விளை - சீழ்க்கையடித்தல்)
அனுகரணம் - போலச் செய்தல்.)

  `மன்றலங் கொன்றை மலர்வேய்ந்து, மஃஃறற (உஃகுவஃகு)
என்று திரியும் இடைமகனே ! - சென்று
மறிஆட்டை உண்ணாமல், வண்கையால் வல்லே,
அறியாயோ, அண்ணாக்கு மாறுழு
 
 

 - யா. கா. 45 மே.

 
(இஃது அவிநயனார் காட்டிய பாட்டு)

என வரும். ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய ஆசிரிய முறியுள் கண்டு கொள்க.
இதனான் அறிக. (46)

ஒத்த நூற்பா

  `எழுத்தல் இசையே அசையொடு சீர்க்கண்
நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே.ழு
 
    46

ஒப்பு ஆமாறு

756. ஒப்புஎனப் படுவது ஓதிய செய்யுளுள்
தப்பினும் ஒருபுடை சார்த்திமற்று அவற்றையும்
செப்பிய பாவொடு சேர்த்தனர் கொளலே.
 
     
இஃது ஒப்பு ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : ஒப்பு என்று சொல்லப்படுவது மேல் சீரும்தளையும் முதலியன
வரையறுக்கப்பட்ட செய்யுளுள் சிலசொன்ன பெற்றியில் திரிந்தும் மிக்கும் குறைந்தும்
வந்தாலும், ஒருபுடை ஒற்றுமை நோக்கிச் சார்த்தி, அங்ஙனம் தவறிய செய்யுட்களையும்
இலக்கண நெறியால் முன் ஓதிய செய்யுட்களின்பால் படுத்திக்கொள்க என்றவாறு.