பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 48

283

 

குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப் பயின்று வருவது;

  `குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்'  
 

- தொ. பொ. 533

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  `உறுபுயல் எழிலி தொகுபெயல் பொழியச்
சிறுகொடி அவரை பொதிதளை அவிழ'
 
 

 - யா. வி. 95 மே.

 
என வரும்.

சித்திரவண்ணம் நெட்டெழுத்தும் குற்றெழுத்துமாய் வரும்;

  `சித்திரவண்ணம்,
நெடியவும் குறியவும் ஒத்துடன் வருமே'
 
 

 - தொ. பொ. 534

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  `ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்'
 
 

- குறுந். 231

 
என வரும்.

மெல்லிசைவண்ணம் மெல்லெழுத்து மிக்கு வருவது;

  நலிபுவண்ணம் ஆய்தம் பயின்று வரும்;
`நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்'
 
 

- தொ. பொ. 535

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்'
 
 

 - குறள் 178

 
என வரும்.