பக்கம் எண் :

296

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

புனைந்துறை ஆமாறு

758, உரைக்கப் படும்பொருட்கு ஒத்தவை எல்லாம்
புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ; அவைதாம்,
பெரிதினைச் சுருக்கலும் சிறிதினைப் பெருக்கலும்
எனஇரண்டு ஆகும் என்மனார் புலவர்.
 
     
இது புனைந்துரை ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : புலவனால் கூறப்படும் பொருட்குப் பொருந்திய புனைந்துரை எல்லாம்
புகழ்ச்சியான் மிக்க புனைந்துரையாம். அப்புனைந்துரைதான், பெரிது ஒன்றனைச்
சுருக்கிச் சொல்லுதலும், சிறிது ஒன்றனைப் பெருக்கிச் சொல்லுதலும் என இரண்டு
வகைப்படும் என்று கூறுவர் அறிவுடையோர் என்றவாறு.

     வரலாறு :
  `அடையார்பூங் கோதையாட் கல்குலும் தோன்றும் ;
புடையார் வனமுலையும் தோன்றும் ; - இடையாதும்
கண்டுகொள்ளா தாயுனுங் காரிகை நீர்மையாட்
குண்டாக வேண்டும், நுசுப்பு'
 
 

 - யா. கா. 45 மே.

 
இது பெரியதனைச் சுருக்கிச் சொல்லியது.

[இடையின் நுண்மை கூறியவாறு]

  `அவாப்போல் அகன்றதன் அல்குல்மேல் சான்றோர்
உசாப்போல உண்டே மருங்குல் ;- உசாவினைப்
`பேதைக் குரைப்பான் பிழைப்பின் பெருகினவே
கோதைக்கொம் பன்னாள் குயம்.'
 
 

 - யா. கா. 45 மே.

 

[அல்குல், குயம் இவை பற்றிய வருணனை.]

இது சிறியதனைப் பெருக்கிச் சொல்லியது. பிறவும் அன்ன (49)