ஒத்த நூற்பா |
| `உரைக்கப் படுபொருட்கு ஒத்தவை எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும்.' | | | | 49 | |
ஆனந்தம் ஆமாறு |
759. | நிறுவிய பொருளுக்கு இறுதியைத் தருவது அறிய வேண்டா ஆனந்தம்; அதுதான், இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே இயற்பாடு இல்லா எழுத்துஆ னந்தமும், அப்பெயர் மருங்கின் மங்கலம் அல்லாத் தொழிற்சொல் புணர்ப்பின் சொல்ஆ னந்தமும் எனவிரண்டு ஆகும்; இவைபுண ராமல் நினைவதை யாப்புஎன நிகழ்த்துவர் புலவர். | | | | | |
இஃது ஆனந்தம் என்பதூஉம் அதன் பகுதியும் கூறுகின்றது. இ-ள் : நிலைபெற்ற பொருளுக்கு அழிவினைப் பயப்பது ஆராயத்தகாத ஆனந்தமாம். அவ்வானந்தந்தான் இயற்பெயர்ப்பால் அளபெடை கூறின் பொருத்தம் இல்லாத எழுத்தானந்தமும், அவ்வியற்பெயர்ப்பால் மங்கலம் ஒழிந்த தொழிற்சொல்லைச் செப்பின் சொல்லானந்தமும் என இரண்டு வகைப்படும் ; இவ்விருவகை ஆனந்தமும் படாமல் நினைந்து சொல்லும் செய்யுளைச் செய்யுள் என்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு. வரலாறு : |
| `ஆழி இழைப்பப் பகல்போம் ; இரவெல்லாம் தோழி துணையாத் துயர்தீரும் ; -- வாழி நறுமாலை தாராய், திரையவோஒ !' என்னும் ; செறுமாலை சென்றடையும் போழ்து.' | | | - யா. கா. 46 மே | | |