| | `சொல்லின் வழுவே சொல்லோத்து மரபில் சொல்லிய குற்றம் தோன்ற லாறே' | | | | | | |
என்றாராகலின். வரலாறு : |
| | `இசையெல்லாம் கொட்ட எழில்தானை ஊர்ந்து வசையிலா மன்னர்வந் தேத்த -- இசையும் அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான் கொடிமதில் கோழியார் கோ' | | | | | | |
இதனுள், `இசையெல்லாம் ஆர்ப்ப' எனவும், `எழில்தானை நாப்பண்' எனவும், `அடிசில் அயின்று' எனவும், `அணி அணிந்து போந்தான்' எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக் கொண்டு பொதுவினால் முடித்தற்பாலனவற்றைப் பொதுப் பெயரால் எடுத்துக் கொண்டு சிறப்பு வினையால் ஒன்றற்கே உரிய சொல் புணர்த்தமையான் சொல் வழு ஆயிற்று. என்னை? |
| | `வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினைகிளவார்' | | | | - தொ. சொ. 46 | | |
| எனவும், |
| | `வேறுவினை யுடைய பொதுவினை கிளப்பப் பொதுவினை உடைய வேற்றுமை உண்டோ' | | | | | | |
எனவும் கூறினாராகலின். பொருள் வழுவாவது பொருளதிகாரத்தோடு மாறுகொள்வது. என்னை? |
| | `பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே' | | | | | | |
என்றாராகலின். வரலாறு : |
| | `முன்னும் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் அத்திசையே இன்னும் தொழத்தோன்றிற்று ஈதேகாண் -- மன்னும் பொருகளிமால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போல் பெருகொளியான் மிக்க பிறை' | | | | | | |
| இது நாணநாட்டம். |