பக்கம் எண் :

312

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `பண்டிப் புனத்துப் பகலிடத் தேனனுள்
கண்டிக் களிற்றை அறிவன்மன் -- தொண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிரம் உடைத்திதன் கோடுழு
 
     
இது நடுங்கநாட்டம். இவையிரண்டும் பொருளதிகாரத்தோடு மாறு கொண்டன. என்னை?
  `நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி
காணுங் காலைத் தலைமகள் தேஎத்துழு
 
     
என்றாராகலின்.
  `வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை
கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும்
ஊரன் செய்த கேண்மை
தேரை வாலினும் பெரிதா கின்றேழு
 
    
இதுவும் பொருளின்மையால் பொருள் வழுவாயிற்று.

     யாப்பு வழுவாவது, யாப்பதிகாரத்தோடு மாறுகொள்வது. என்னை?
  `யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம்
கோப்ப வாராக் கோவைத் தாகும்ழு
 
     
என்றாராகலின்.

     வரலாறு :
  `குமண ! வாழி ! குமண ! உமணருப்பில்
தேய்கநின் பகையே; யான்சில
பெருமை வேண்டி வந்தேன்;
நீநின் பெருமை வேண்டின் தாழு
 
     
இப்பாட்டு முதல் எடுத்துக்கொண்ட ஓசையில் கெட்டுப் பின் பரவிக் கட்டுரையால்
வந்தமையால் யாப்புவழு. பிறவும் அன்ன ...