48 | அவற்றுள், பா அ வண்ணம், சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். |
| - தொல். பொ. 526 |
| தாஅவண்ணம், இடையிட்டு வந்த எதுகைத் தாகும். |
| - 527 |
| வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். |
| - 528 |
| மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. |
| - 529 |
| இயைபு வண்ணம் இடைஎழுத்து மிகுமே. |
| - 530 |
| அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். |
| - 531 |
| நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். |
| - 532 |
| குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். |
| - 533 |
| சித்திரவண்ணம், நெடியவும் குறியவும் ஒத்துடன் வருமே. |
| - 534 |
| நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். |
| - 535 |
| அகப்பாட்டுவண்ணம், முடியாத் தன்மையின் முடித்தல் மேற்றே. |
| - 536 |
| புறப்பாட்டுவண்ணம், முடிந்தது போன்று முடியா தாகும். |
| - 537 |
| ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். |
| - 538 |
| ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். |
| - 539 |
| எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். |
| - 540 |
| அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். |
| - 541 |
| தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். |
| - 542 |
| ஏந்தல்வண்ணம், சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும். |
| - 543 |
| உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். |
| - 544 |
| முடுகுவண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே. |
| - 545 |