பக்கம் எண் :

38

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

தோற்றுவாய் செய்த செய்யுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதனை விளங்கக் கூறும்
இடத்து, மேல் சொல் ஓத்தினுள்,
 

 

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்குஇடன் ஆக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வது செய்யுள்
 
 

- இ. வி. 169

 
எனக் கூறிய இயல்பிற்றாகி எழுத்து முதலிய அறுவகை உறுப்பினையும் பொருத்தமுறத்
தழுவிப் பாவும் பாவினமும் என இரு பகுதியை உடைத்தாம் என்றவாறு.
 

 

`மூவிரண்டு உறுப்பும் மேவரச் சிவணி'  
 

 

 
எனவே, மேவரச் சிவணாதனவும் உள என்பதூஉம் பெற்றாம். அவை, எழுத்து
ஓத்தினுள் கூறிய மாத்திரை வகையும், அகத்து ஓத்தினுள் கூறிய திணை முதலிய
பன்னிரு வகையும் இவ்வோத்துள் கூறப்படும் வண்ணமும், அம்மை முதலிய வனப்பு
எட்டும் அவை போல்வன பிறவுமாம் என்று உணர்க.

(1)

விளக்கம்
 

 

மேல் நிறுத்த முறையானே என்றது,
`போக்குஅறு மரபின் பொருள்எனப் படுவது
நோக்குஅறு வீடு நுவற்சிசெல் லாமையின்
அறம்பொருள் இன்பம் ஆகும் அதுவே
அகனும் புறனுமென்றுஆயிரு பாற்றாய்
வகைபட வந்த அணிநலம் தழீஇச்
செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே'
 
 

- இ.வி.பொ.2

 
என்ற நூற்பாவினை உட்கொண்டு சொற்றது.