| `தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்வகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலில் தொகுத்து.ழு | | | | | |
| `நாதம் முதலாக நல்லுறுப் பேழுமியைந்து ஏதமில் தன்மையில் ஆசாம் - தாதுக்கள் ஏழும் புணர்ந்த தியாக்கை எழுத்தாதி ஏழும் புணர்ந்த தியாப்பு.ழு | | | | | |
| `யாப்பெனப் படுவது யாதென வினவின் தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.ழு | | | - நற்றத்தனார் | | |
| இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பின் தாமினிது விளங்க யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே.ழு | | | - பல்காயனார் | | | | | |
| `எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா நடையது யாப்பெனப் படுமே.ழு | | | - யா. வி. 1 | | |
|
| `கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணாளர்நிழற்கீழ் எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர் பந்தம் அடிதொடை பாஇனம் கூறுவன் பல்லவத்தின் சந்தம் மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே.ழு | | | - யா. கா. 1 | | | | | |
| `சிரைமுதல் யாப்புறச்சேருயிர்க்கு உடல்போல் உரைமுதல் யாப்புற உணர்பொருட்கு உடலாச் சிறப்பிற் செய்வன செய்யு ளாம்அவை உறுப்பியல் மரபுமூன்று உரைப்ப விளங்கும்.ழு | | | - தொ. வி. 202 | | | | | |
| `எழுத்துஅசை சீர்தளை அடிதொடை ஆறும் வழுத்திய செய்யுள் மருவுஉறுப்பு எனலேழு. | | | - தொ. வி. 203 | | | | | |