செய்யுள் உறுப்புக்களின் பெயர்க்காரணம் |
|
711. | எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து அசைத்துஇசை கோடலின் அசையே; அசைஇயைந்து சீர்கொள நிற்றலின் சீரே; சீர்இரண்டு தட்டு நிற்றலின் தளையே; அத்தளை அடுத்து நடத்தலின் அடியே; அடிஇரண்டு தொடுத்துமன் சேறலின் தொடையே; அத்தொடை பாவி நடத்தலின் பாவே; பாஒத்து இனமாய் வழங்கலின் இனம்எனப் படுமே. | | | | | |
இது மேற்கூறிய எழுத்து முதலிய எட்டற்கும் காரணக் குறி கூறும் முகத்தான் பொது இலக்கணமும் அவற்றின் கிடக்கை முறையும் கூறுகின்றது. இதற்குப் பொருள் கூறுகின்றிலம்; பெரும்பான்மையும் சூத்திரத்தானே பொருள் விளங்கக் கிடத்தலின். மன் என்ற மிகையானே ஓரடிக் கண்ணவாகிய தொடைவிகற்பமும் கொள்க. |
| (2) |
விளக்கம் |
|
மேற்கூறிய என்றது சென்ற நூற்பாவில் எழுத்து முதல் இனம் ஈறாக முறையாகக் கூறியது. ஒலிஅணு வடிவு அமைக்கப்படும் வகையில் வரையறுக்கப்படுதலின் எழுத்து எனப்பட்டது. எழுத்து ஒன்றோ பலவோ ஒலித்து வரையறுத்த ஓசை கோடலின் அசை; அசை தனித்தோ இரண்டு முதலாக இணைந்தோ சீராக அமைதலின் சீர்; சீர் இரண்டு நின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதல் அசை தளைந்து நிற்றலின் தளை; தளைகள் தன்னிடம் பொருந்தி அடுத்து |