பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 3

47

 
     இ-ள்: நேர் அசை என்றும் நிரை அசை என்றும் மேல் கூறிய அசை இரண்டு
வகையினை உடைத்தாம் என்றவாறு.
 

(4)

விளக்கம்

நிறுத்த முறை - முதல் நூற்பா; அசைகளைக் கணக்கிடும் போது ஒற்றெழுத்துக்களை
நீக்கியே கணக்கிடல் வேண்டும் என்ற முறைப்படி நேர் அசையில் ஒரே எழுத்தும்
நிரை அசையில் இரண்டு எழுத்தும் உண்மை போதரும்.

ஒத்த நூற்பாக்கள்

 
  `நேரசை ஒன்றே நிரைஅசை இரண்டுஅலகு
ஆகும் என்ப அறிந்திசி னோரே.'
நேர்ஓர் அலகு நிரைஇரண்டு அலகு
நேர்பு மூன்றுஅலகு நிரைபுநான்கு அலகுஎன்று
ஓதினார் புலவர் உணரு மாறே.'
 
 

- அவிநயம்

 
  `தனிஅசை என்றா இணை அசை என்றா
இரண்டென மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே.'
 
 

- காக்கை.

 
  `நேரசை என்றா நிரைஅசை என்றா
ஆயிரண்டு ஆகி அடங்குமன் அசையே.
 
 

- யா. வி. 5

 
  `நேர்நேர் நிரைநேராய் நேர்பு நிரைபடங்கும்
சீர்மேல் அசைபலவாய்ச் சேருங்கால் - ஈரியல்பில்
குற்றிபோல் குற்றிகரம் கொண்டியற்ற நேர்நிரையாய்
முற்றி முடிந்து விடும்.'
 
     
  `நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும்
மேவ ஓடிய விடுவா ரும்முளர்
நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும்
ஆட்டுருப் போல ஒருவிரல் நேரே.'