| `குறில்இணை ஆகியும் குறில்நெடில் ஆகியும் ஒற்றொடு வந்தும் நிரைஅசை ஆகும்.' | | | - சிறுகாக்கை | | |
| `குறிலும் நெடிலும் எனுமிவை நேரிசை; குற்றெழுத்துப் பெறின்முன் இவையே நிரையசையாம்; பிழைப்பில்லை பின்புஒற்று, இறினும்.' | | | - வீர. 107 | | |
| `நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகை யானே.' | | | - யா. வி. 6 | | |
| `குறில்இணை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும் நெறிமையின் நான்காய் வரும்நிரை அசையே.' | | | - யா. வி. 8 | | |
| `குறிலேநெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே நெரியேவரினும் நிறைந்துஒற்று அடுப்பினும் நேர்நிரை என்று அறி; வேய்புரையும்மென் தோளி! உதாரணம்ஆழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்தோய் விளாம்என்று வேண்டுவரே.' | | | - யா. கா. 5 | | |
| `அசையே நேர்நிரை யாம்இரு வகைய; நெடில்தனிக் குறில்மெய் நிகழ்குறி நேராம்; இணைக்குறில் குறில்நெடில் இவைநிரை யசையே.' | | | - தொ. வி. 204 | | |
| `நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகை யானே.' | | | - மு. வீ. யா. 1 | | |
| `குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும் நெறிமையின் நான்காய் வரும்நிரை அசையே.' | | | - மு. வீ. யா. 2 | | |
| `நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம் ஆகும்நாற் சீரும் அகவற்கு உரிய.' | | | - மு. வீ. யா. 3 | | |