செய்யுளியல் - நூற்பா எண் 6, 7 | 53 | | | `அசையே இரண்டும் மூன்றும் தத்தமில் இசைய வருவன சீர்எனப் படுமே.' | | | - பல்காயம் | | | | `நாலசை யானும் நடைபெறும்; ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே.' | | | - பல்காயம் | | | | 6 | சீர்களின் வகையும் பாவிற்கு உரிமையும் | 716. | ஈரசை கூடிய சீர்இயற் சீர்; அஃது ஈரிரண்டு ஆம்அவை அகவற்கு இசைதலும், மூவசை கூடிய சீர்உரிச் சீர்; அது நாலிரண்டு ஆகி நடைபெறும்; அவற்றுள், நேர்இறு நான்கும் வெள்ளை, அல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட்டு இடுதலும், நாலசை யானும், ஓரசை யானும், சீர்பெற நடப்பது பொதுச்சீர் ; ஆங்கு, அது எண்ணிரண்டு, இரண்டாய், இயறலும், நெறியே. | | | | | | இது முற்கூரிய சீர்கள் ஆமாறும் அவற்றது எண்ணும் அவை செய்யுட்கு உரியவாமாறும் கூறுகின்றது. இ-ள் : இரண்டு அசையான் வரும் சீர் இயற்சீர் எனப்படும். அது நேர்நேர்ஆயும், நிரைநேர்ஆயும், நிரைநிரைஆயும், நேர்நிரைஆயும், தம்மில்கூட நான்காம். அங்ஙனம் ஆகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீர் ஆதலும்; மூவசையான் வரும் சீர் உரிச்சீர் எனப்படும். அது நேர்நேர்நேராயும், நிரைநேர்நேராயும், நிரைநிரைநேராயும், நேர்நிரைநேராயும், நேர்நேர்நிரையாயும், நிரைநேர்நிரையாயும், நிரைநிரைநிரையாயும், நேர்நிரைநிரையாயும் தம்மில்கூடி எட்டாகி நடக்கும்; அவ்வெட்டனுள் நேர்ஈற்று உரிச்சீர் நான்கும் வெண்பா உரிச்சீர் ஆதலும், நிரைஈற்று உரிச்சீர் நான்கும் வஞ்சி உரிச்சீர் ஆதலும் ; |
|
|
|