| `ஈரசைச்சீர் முன்பின் னாகவைத் துறழ்ந்து மாறியக்கால் நாலசைச் சீர்பதி னாறாம். | | | - அவிநயம் | | |
| `நாலசைச் சீரும் ஒரோவிடத்து இயலும்; பாவொடு பாவினம் பயிறல் இன்றி.' | | | - பல்காயம் | | |
| `நேர்நிரை வரினே சீர்நிலை எய்தும்; பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.' | | | - அவிநயம் | | |
| `நேரும் நிரையும் சீராய் வருதலும் சீரும் தளையும் சிதைவழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும்.' | | | - மயேச்சுரம் | | |
| `ஈரசை கூடிய சீர்இயற் சீர்; அவை ஈரிரண்டு என்ப; இயல்புஉணர்ந் தோரே.' | | | - யா. வி 11 | | |
| `நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரைஎன்று ஈரிரண்டு என்ப; இயற்சீர்த் தோற்றம்.' | | | - யா. வி. 11 மே | | |
| `மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கினும் நேர்இறு நான்கும் வெள்ளை; அல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.' | | | - யா. வி. 12 | | |
| `நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.' | | | - யா. வி. 13 | | |
| `ஓரசைச் சீரும்அஃது; ஓரிரு வகைத்தே.' | | | - யா. வி. 14 | | |
| `ஈரசை நாற்சீர் அகவற் குரிய; வெண் பாவினவாம் நேரசை யாலிற்ற மூவசைச் சீர்; நிரை யாலிறுப வாரசை மென்முலை மாதே! வகுத்தவஞ் சிக்குரிச்சீர்; ஓரசை யேநின்றும் சீராம்; பொதுஒரு நாலசையே.' | | | - யா. கா. 6 | | |
| `தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர்அகவற்கு ஆமாம்; கடைகாய் அடையின்வெண் பாவிற்கு; அந்தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே! வகுத்தவஞ் சிக்குரிச்சீர்; நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம், நாள்மலரே. | | | - யா. கா. 7 | | |