பக்கம் எண் :

60

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால்
எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும்; இனிஅவற்றுள்
கண்ணிய பூவினம் காய்ச்சீர் அனைய; கனியொடொக்கும்
ஒண்ணிழற்சீர்; அசைச் சீர்இயற் சீர்ஒக்கும்;ஒண்தளைக்கே.'
 
 

 - யா. கா. 8

 

 

`நாலசை யால்நடைபெற்றன வஞ்சியுள்,
ஈரொன்று அணைதலும், ஏனுழி ஒன்றுசென்று
ஆகலும், அந்தம் நிரையசை வந்தன,
கூறிய வஞ்சிக்கு உரியன ஆதலும்
ஆகும் என்ப அறிந்திசி னோரே.'
 
 

- காக்கை. யா. கா. 8 மே,

 

 

`குன்றக் குறவன் அகவல், பொன் னாரம்வெண் பாட்டு, வஞ்சிக்கு
ஒன்றும் உதாரணம் பூந்தா மரைஎன்ப, ஓரசைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும், பாலொடு நாலசைச்சீர்க்கு
அன்றதென் னார், அள்ளற் பள்ளத்தினோ டங்கண் வானத்துமே.'
 
 

- யா. கா. 9

 

 

`அசையிரண்டு ஒன்றின் முற்சீர்; மூவசை ஒன்றின்நேர்
இறுவது இடைச்சீர்; நிரைஇறின்பிற்சீர் எனஇயம்பே.'
 
 

  - வீ. சோ. யா. 1

 

 

`கருவிளங் கூவிளம் தேமா புளிமா எனக்கலந்து,
மருவிய நான்கு முதற்சீர்க ளாம்;மற் றவற்றினந்தத்து
உருவமாம் காய்வரின் ஆம்இடைச்சீர்; ஒண் கனிவருமேல்
செருவமர் வேற்கண்ணி னாய்! கடைச் சீரெனத் தேர்ந்தறியே.'
 
 

  - வீர. யா. 2

 

 

`நேரே நிரையே அசைச்சீர் இரண்டென
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசை இயற்சீர் ஈரிரண்டு; இவற்றோடு
ஈற்று நேர்நிரை இருநான்கு உரிச்சீர்;
நேர்இறும் வெண்சீர் நிரைஇறும் வஞ்சிச்சீர்
நாலசை பொதுச்சீர் நானான்கு என்ப.'
 
 

- தொ. வி. 204