| `நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா, நிரைநிரை கருவிளம், நேர்நிரை கூவிளம், ஆகுநாற் சீரும், அகவற் குரிய.` | | | - மு. வீ. யா. 3 | | |
| `ஈரசை நாற்சீர் ஈற்றினுள் நேரசை விளைந்துகாய் எனவரல், வெண்பாக் குரிய.' | | | - மு. வீ. யா. 4 | | |
| `நிரைஅசை அடைந்து கனிஎன நேர்வது, வஞ்சிக்கு உரியவாம், வழுத்துங் காலே.' | | | - மு. வீ. யா. 4 | | |
| `தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் புணர்ந்து வருவது, பொதுச்சீர் ஆகும்.' | | | - மு. வீ. யா. 6 | | |
| `ஓரசை நின்றும் சீரா கும்மே.' | | | - மு. வீ. யா. 7 | | |
தளையின் பொதுவகை |
717. | தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும் என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையே. | | | | | |
இது நிறுத்த முறையானே தளைவகை இத்துணைத்து என்கின்றது. இ-ள் : தன் சீர் இறுதி தன் வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றுதலும் ஒன்றாமையும் என இருவகைப்படும் மேற்கூறிய தளை என்றவாறு. |
| (8) |
விளக்கம் |
| நிறுத்த முறை - செய்யுளியல் முதல் நூற்பா. | | | | | |
முதல் சீரின் ஈற்றசை நேர் அல்லது நிரையாக இருக்க, வருஞ்சீரின் முதல் அசை நேர் அல்லது நிரையாக அமையப் பொருந்துவதே ஒன்றுதலாம். முதல் சீரின் ஈற்றசை நேர் அல்லது நிரையாக இருக்க வருஞ்சீரின் முதல்அசை மாறியிருப்பின் ஒன்றாமையாகும். |