நேர் ஒன்று ஆசிரியத்தளையான் வந்த செய்யுள் : |
| `உள்ளார் கொல்லோ தோழி ! முள்ளுடை அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய், துகில்பொதி பவளம் ஏய்க்கும், அகில்படு கள்ளிஅம் காடிறந் தோரே' | | | - யா. கா. 11 மே. | | |
எனவும், [உள்ளார் - நேர்நேர் - தேமா; கொல்லோ - நேர்நேர்; மாமுன் நேர் வருதலின் நேர் ஒன்று ஆசிரியத்தளை - பிறவும் அன்ன.] |
நிரை ஒன்று ஆசிரியத்தளையான் வந்த செய்யுள் : |
| `திருமழை தலைஇய இருள்நிற விசும்பின், விண்அதிர் இமிழ்இசை கடுப்பப் பண்ணமைத் தவர்தேர் சென்ற ஆறே' | | | - யா. கா. 11 மே | | |
எனவும், [திருமழை - நிரைநிரை - கருவிளம்; தலைஇய - நிரைநிரை; விளம்முன் நிரை வருதலின் நிரை ஒன்று ஆசிரியத்தளை - பிறவும் அன்ன.] |
வெண்சீர் வெண்டளையானும் இயற்சீர் வெண்டளையானும் வந்த செய்யுள் : |
| `சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி, முலைவிலங்கிற் றென்று முனிவாள், -- மலைவிலங்கு தார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போழ்து' | | | - யா. கா. 11 மே. | | |
எனவும், [சிலை விலங்கு - நிரைநிரை நேர் - கருவிளங்காய்; நீள் புருவம் - நேர் நிரைநேர்; - காய்முன் நேர் வருதலின் வெண்சீர் வெண்டளை. என்று முனிவாள் - மாமுன் நிரை வருதலின் இயற்சீர் வெண்டளை. பொறுக்குமோ கார்மாலை - விளம்முன் நேர் வருதலின் இயற்சீர் வெண்டளை. பிறவும் அன்ன.] |