ஒன்றிய வஞ்சித்தளையானும் ஒன்றாத வஞ்சித்தளை யானும் வந்த செய்யுள் : |
| `மந்தாநிலம் வந்தசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாள்மலர்மிசை என ஆங்கு இனிதின் ஒதுங்கிய இறைவனை மனம்மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே' | | | - யா. கா. 11 மே. | | |
எனவும், [வெண்சாமரை - நேர்நேர்நிரை - தேமாங்கனி ; புடை பெயர்தர - நிரைநிரைநிரை - கருவிளங்கனி ; கனிமுன்நிரை வருதலின் ஒன்றிய வஞ்சித்தளை. மந்தாநிலம் வந்தசைப்ப - கனிமுன் நேர் வருதலின் ஒன்றாத வஞ்சித்தளை.] |
கலித்தளையான் வந்த செய்யுள் : |
| `செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய், எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல், மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே' | | | - யா. கா. 11 மே. | | |
எனவும், [செல்வப்போர் - நேர்நேர்நேர் - தேமாங்காய்; கதக்கண்ணன் - நிரைநேர்நேர் - காய்முன் நிரை வருதலின் கலித்தளை.] |
நாலசைச்சீர் உரிச்சீரே போலத் தளைவகை எய்திய செய்யுள் : |
| `அங்கண்வானத் தமரரசரும் வெங்களியானை வேல்வேந்தரும் வடிவார்கூந்தல் மங்கையரும் கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச் சிங்கஞ்சுமந்த மணிஅணைமிசைக் | | | | | |