விளக்கம் |
| மாமுன் நேர்வரின் நேர்ஒன்று ஆசிரியத்தளை. விளம்முன் நிரைவரின் நிரைஒன்று ஆசிரியத்தளை. மாமுன்நிரையும் விளம்முன் நேரும்வரின் இயற்சீர் வெண்டளை. காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை. காய்முன் நிரைவரின் கலித்தளை. கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சித்தளை. | | | | | |
|
நாலசைச் சீர்கள் எல்லாம் மூவசைச் சீர்கள் போலக் கொள்ளப்பட்டுப் பூக்கள் காய்களாகவும், நிழல்கள் கனிகளாகவும் அமைந்தாற் போலத் தளை அறுக்கப்படும். ஓர் அசைச் சீர்களாகிய நேர் நிரை என்பனவற்றை நேர்நேர் போலவும் நிரைநிரை போலவும் கொள்ளுதல் வேண்டும். |
ஒத்த நூற்பாக்கள் |
| `இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்பம் இலவாய் விரவி நடப்பின் அதற்பெயர் ஆசிரி யத்தளை யாகும்.' | | | - காக்கை | | |
| `ஈரசை இயற்சீர் ஒன்றியது எல்லாம் ஆசரி யத்தளை என்மனார் புலவர்' | | | - மயேச்சுரம் | | |
| `இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்ப நடையது வெண்சீர் ஆகும்'. | | | - காக்கை | | |
| `உரிச்சீர் அதனுள் உரைத்தமை அன்றிக் கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே.' | | | - காக்கை | | |
| `நேரீற்று நேர்வரின் வெண்டளை யாகும் ; அந் நேரீற் றியல்பின் நிரைவரின் - ஓரும், கலித்தளையாம்; பால்வகையால் வஞ்சித் தளையாம்; நிரைவரினும் நாலசைச்சீர்க் கண்.' | | | | | |