| `தளையாம் சீர்தமுள் தளைப்படும் கட்டே அவைஏழ் வகைய ஆகும்; அவற்றுள், ஆசிரியத் தளையாம் இயற்சீர் ஒன்றல்.ழு | | | - தொ. வி. 207 | | |
| `வெண்டளை என்ப வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் என இரு வகைத்தே.ழு | | | - தொ. வி. 208 | | |
| `கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே.ழு | | | - தொ. வி. 209 | | |
| `வஞ்சித் தளையாம் வஞ்சிக்குஉரிச்சீர் ஒன்றலும் ஒன்றாது ஒழுகலும் என்ப.ழு | | | - தொ. வி. 210 | | |
| `மாமுன் நேர்நேர் ஒன்றிய அகவல் தளையாம்; விளமுன் நிரைநிரை ஒன்றிய அகவல் தளையாம்; ஆயுங் காலே.ழு | | | - மு. வீ. யா. 9 | | |
| `காய்முன் நேரே வெண்சீர் வெண்டளை; மாமுன் நிரையும் விளமுன் நேரும் இயற்சீர் வெண்டளை, என்மனார் புலவர்.ழு | | | - மு. வீ. யா. 8 | | |
| `கனிமுன் நேர்ஒன் றாதவஞ் சித்தளை; ஒன்றிய தளைநிரை வரினா கும்மே.ழு | | | - மு. வீ. யா. 10 | | |
| `காய்முன் நிரைவரின் கலித்தளை ஆகும்.ழு | | | - மு. வீ. யா. 11 | | |
| `பொதுச்சீர்ப் பூக்காய் ஆகும்; நிழல்கனி ஆகும்; என்மனார் அறிந்திசி னோரே.ழு | | | - மு. வீ. யா. 12 | | |
| `அகவற் சீரற் றாகும்ஓ ரசைச்சீர்.ழு | | | - மு. வீ. யா. 13 | 9 | |
|
ஐவகை அடிகள் |
|
719. | குறள்அடி சிந்துஅடி அளவு அடி நெடில்அடி கழிநெடில் அடிஎன அடிஐந்து ஆகும். | | | | | |
இது நிறுத்தமுறையானே அடிவகை இத்துணைத்து என்கின்றது. |