| மாம்பழக் கனிகளும் மதுத்தண்டு ஈட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே' | | | - யா. கா. 13 மே; சூளா. நகர. 14 | | |
எனவும், |
நெடிலடியான் வந்த செய்யுள் : |
[ஐஞ்சீர் அடி] |
| `வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழ்ஒளி மூர்த்தி ஆகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்.' | | | யா. கா. 13 மே; சூளா. கடவுள் வாழ்த்து | | |
எனவும், |
ஐந்தளையான் வந்த கழிநெடிலடிக்குச் செய்யுள் : |
[அறுசீர் அடி] |
| `இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர்ந்து இனவண்டு புடைசூழ நுரைக்கள் என்னுமக் குழம்புகள் திகழ்ந்தெழ நுடங்கிய இலயத்தால் திரைக்க ரங்களில் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்(து) அரைக்கும் மற்றிது குணகடல் திரையொடும் பொருதலது அவியாதே.' | | | - யா. கா. 13 மே; சூளா. கல். 51 | | |
எனவும், |
அறுதளையான் வந்த கழிநெடிலடிக்குச் செய்யுள் : |
[எழுசீர் அடி] |
| `கணிகொண்டு அலர்ந்த நறவேங்கை யோடு கமழ்கின்ற காந்தள் இதழால் அணிகொண்டு அலர்ந்த வனமாலை சூடி அகில்ஆவி குஞ்சி கமழ மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து வரைஆகம் மீது திவளத் துணிகொண்டு இலங்கு சுடர்வேலி னோடு வருவான்இது என்கொல் துணிவே.' | | | - யா. கா. 13 மே; சூள. அர. 197 | | |
எனவும், |
|