பக்கம் எண் :

80

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இசைச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்.ழு
 
 

- காக்கை

 

 

`எல்லா அடியினும் இனப்பா நாற்சீர்
அல்லா மெல்லடிப் பாவினுக் கியலா.ழு
 
 

- அவிநயம்

 

 

`சிந்தடி குறளடி என்றிரண்டு அடியான்
வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.ழு
 
 

 - யா. வி. 26

 

 

`கலியொடு வெண்பா அகவல் கூறிய
அளவடி தன்னான் நடக்குமன் அவையே.ழு
 
 

 - யா. வி. 27

 

 

`பாவினம் எல்லா அடியினும் நடக்கும்.ழு  
 

 - யா. வி. 28

 

 

`வெண்பா அகவல் கலிப்பா அளவடி, வஞ்சியென்னும்
ஒண்பா அடிகுறள் சிந்து என்று உரைப்ப.ழு
 
 

- யா. கா. 22

 

 

`வளம்பட என்பது வெள்ளைக்கு, அகவற்கு உதாரணம் செங்
களம்படக்கொன்று, கலிக்கரி தாய, கண் ணார்கொடிபோல் நுடங்கிடை மாதே! சுறமறி, தொன்னலத்தின் புலம்பென்று உளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே.ழு
 
 

- யா. கா. 23

 
 

12

 

தொடையும் விகற்பமும்
 

 

மோனை எதுகை முரண்இயைபு அளபெடை
ஆனஅவ் வைந்தும், அவற்றோடு ஒத்துஉறூஉம்
பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை
கூழை கதுவாய் மேலதூஉம் கீழதூஉம்
சீரிய முற்றொடு சிவணும் ஐஏழும்,
தொடையும் அத்தொடையின் விகற்பமும் ஆகும்.
 
       
     இ-ள் : அடி மோனையும் அடி எதுகையும் அடி முரணும் அடிஇயைபும்
அடிஅளபெடையும் ஆகிய அவ்வைந்தும், அத்தொடைகளை ஒத்து ஓர் அடிக்கண்ணே
வரும் இணைமோனையும் பொழிப்புமோனையும் ஒரூஉமோனையும் கூழைமோனையும்
மேற்கதுவாய் மோனையும் கீழ்க்கதுவாய் மோனையும் முற்று மோனையும்,