பக்கம் எண் :

82

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`தொடைஎனப் படுவது அடைவகை தெரியின்
எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றின்
நிரல்பட வந்த நெறிமைத் தாகி,
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப; முழுதுணர்ந் தோரே.ழு
 
 

- காக்கை

 

 

`அடுத்த அடியிரண்டு யாவகைப் பாவினும்
தொடுத்து வழங்கலின் தொடையெனப்படுமே.ழு
 
 

- மயேச்சரம்

 

 

`எழுத்தியல் தொடைகளின் இடைக்கண் மாறுகோள் மொழிப்பொருள் தொடைமுறை பிறழ வைத்ததோர்
இழுக்கியல் பிலாநிரல் நிறையும் எட்டென
ஒழுக்கினர் உண்மையை உணர்தல்வேண்டும்.ழு
`தொடையே அடியிரண்டு இயையத் தோன்றும்.ழு
 
 

 - யா. வி. 33

 

 

`மோனை எதுகை முரண் இயைபு அளபெடை
பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை
கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம்
சீரிய முற்றொடு சிவணுமார் அவையே.ழு
 
 

 - யா. வி. 34

 

 

`மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரான்
இயங்கினும் தளைவகை இன்னன ஆகும்.ழு
 
 

 - அவிநயம்

 

 

பல்வகைத் தொடைஒரு பாவினில் தொடுப்பின்,
சொல்லிய முதல்தொடை சொல்லினர் கொளலே.ழு
 
 

- சிறுகாக்கை

 

 

`தொடையடி உட்பல வந்தால், எழுவாய்
உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே.ழு
 
 

- காக்கை

 

 

`விகற்பங் கொள்ளாது ஓசையின் அமைதியும்
முதற்கண் அடிவரின், முடிவ தாகும்.ழு
 
 

 - பல்காயம்

 

 

`முதற்சீர்த் தோற்றம் அல்லது ஏனை
விகற்பம் கொள்ளார் அடியிறந்து வரினே.ழு
 
 

- நத்தத்தம்

 

 

`தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும்
முதல்வந் ததனான் மொழிந்திசின் பெயரே.ழு
 
 

- யா. வி. 53

 
13