பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 17, 18

99

 
 

முழுதும் - யா. வி. 55

 

 

`பண்ணும் திறனும்போல் பாவும் இனமுமாய்
வண்ண விகற்ப வகையின்றி, -- பண்ணின்
திறம் விளரிக் கில்லதுபோல், செப்பல் அகவல்
இசைமருட்கும் இல்லை; இனம்.'
`வெண்பா முதலா நால்வகைப் பாவும்
எஞ்சா நால்வகை வருணம் போல;
பாவினத்து இயற்கையும் அதனோ ரற்றே.' - வாய்ப்பியம்

`வெண்பா முதலாக வேதியர் ஆதியா
மண்பால் வகுத்த வருணமாம்;- ஒண்பா
இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர்; தொன்னூல்
மனந்திட்பக் கற்றோர் மகிழ்ந்து.'

`அறமுதல் நான்கென்றும், அகமுதல்நான் கென்றும்,
திறனமைந்த செம்மைப் பொருள்மேல், - குறைவின்றிச்
செய்யப் படுதலாற் செய்யுள்; செயிர்தீரப்
பையத்தாம் பாவுதலாற் பா.'

`வெண்பா அகவல் கலிப்பா அளவடி, வஞ்சிஎன்னும்
ஒண்பா அடிகுறள் சிந்துஎன்று உரைப்ப;'
 
 

 - யா. கா. 22

 

 

`வெண்பா அகவல் விரிகலி வஞ்சி
மருட்பா எனஐ வகைப்பா ............... .'
 
 

- தொ. வி. 219

 17

பா இனம்

727.

தாழிசை துறையே விருத்தம் என்றுஇவை
பாஇனம் பாவொடு பாற்பட்டு இயலும்.
 
     
இது நிறுத்தமுறையானே முற்கூறிய பாஇன வகை இத்துணைத்து என்கின்றது.