பாட்டியல் -
நூற்பா எண் 40 |
145 |
‘நிரைஇரண்டாய்ப்
பின்புநேர்இறின் அந்தரம், நேர்இரண்டாய்
நிரைஇறின்
மாருதம், நேர்நடுவாகி நிரைஇருபால்
விரைதருகோதை! வெந்தீக்கணம்,
நேர்இரண்டின் நடுவே
நிரைவருமாயின்
பருதி; இந்நாற்கணம் நீக்கினவே.’
- நவ. 23
‘துறக்கம்மதி
வான்பரிதி காய்ச்சீர் முன்னும்,
சூழ்காற்றுத்
தீநிலம்நீர் கனிச்சீர்ப் பின்னும்,
நிறுத்து,கணம் இவ்விரண்டாம்;
அகவற் சீரின்
நேர்ஈறு
வெள்ளைச்சீர், நிரைவஞ் சிச்சீர்,
சிறப்புடைஇவ் விரண்டுமாம்,
கணப்பேர் மற்றும்
திகழ்இயற்சீர்
அயன்திருக்கோக் கருடன் முன்னாம்
வெறுத்தபின்னும்
ஆம்என்ப, இறைவன் நாட்கு
மேவுகண நாட்பொருத்தம்
வேண்டும் மாதோ.’
- சிதம். பாட். 26
‘கணம்இயல்
பொருத்தமே கணம்எனும் சீரினுள்
முன்னர் இந்திரன்,
முன்நிரை நிலனே,
நிரைநேர் நேர்மதி,
நேர்நிரை நிரைநீர்,
இந்நாற்கணம் நன்றாம்
இவைமுதல் சீர்க்கே;
இருவிளங் காய்முறை
அந்தரம் சூரியன்;
இருமாங் கனிமுறை
வாயு தீஇவை;
வருமுதற் சீர்க்கு
வழுக்கணம் என்ப.’
- தொ. வி. 294
‘தேமாங் காய்இந்
திரகணம், புளிமாங்
காய்சந் திரகணம்,
கருவிள மென்கனி
நிலக்கணம், கூவிளங்
கனிநீர்க் கணமிவை
ஆகும்; கருவிளங்
காய்அந் தரகணம்,
கூவிளங் காய்இர
விக்கணம், தேமாங்
கனிகால் கணம்,
புளி மாங்கனி தீக்கணம்.’
- மு. வீ. யா. ஒ. 76
40
|