பக்கம் எண் :

New Page 1
150     

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

தசாங்கத்திற்குச் சிறப்புவிதி

 

803. உற்ற தசாங்கத் தினைஒரு சீரான்

    முற்ற உரைத்தல்; முறைபிரித்து இசைப்பின்

    பிழையாம்; புணர்மொழிப் பெயர்ஈற் றின்தொகின்

    வழுவா காஎன வகுத்தனர் புலவர்.

 

இது தசாங்கத்தினைப் புணர்க்கும் திறத்து ஆவது ஒரு சிறப்புக் கூறுகின்றது.
 

     இ - ள்: பாட்டுடைத்தலைவற்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒரு
சீராலே முடிவுபெறப் பாடுவது இலக்கணமாம்; பிரித்து வேறு சொல் முடிபு
கொடுத்துக் கூறல் குற்றமாம்; பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண்
தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது
என்றவாறு.                       

 (43)

விளக்கம்

 

     மலைமுதலிய பத்து அங்கங்களும் தனித்தோ அடையடுத்தோ
ஒரேசீராக அமைக்கப்பட்டமை சான்றோர் செய்யுட்களில் காணப்படும்.
    

‘புகலாகும் இன்பப் பொருப்பும்’

             -    மலை

 

‘தேர்இன்பம் நல்கும் திருநாடும்’

             -    நாடு

 

‘அல்லாது உயர்ந்த அணிநகரும்’

             -    நகர்

 

‘கூறி நடாத்தும் குரகதமும்’

             -    பரி

 

‘காய்ந்த சிவஞானக் கடாக்களிறும்’

             -    யானை

 

‘நார்அகத்துக் கட்டும் நறுந்தொடையும்’

             -    மாலை

 

‘வந்த நவநாத மணிமுரசும்’

             -    முரசு

 

‘ஆக்கி அசைத்தருளும் ஆணையும்

             -   ஆணை