150 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
தசாங்கத்திற்குச் சிறப்புவிதி
803. உற்ற தசாங்கத் தினைஒரு சீரான்
முற்ற உரைத்தல்; முறைபிரித்து இசைப்பின்
பிழையாம்; புணர்மொழிப் பெயர்ஈற் றின்தொகின்
வழுவா காஎன வகுத்தனர் புலவர்.
இது தசாங்கத்தினைப் புணர்க்கும் திறத்து ஆவது ஒரு சிறப்புக் கூறுகின்றது.
இ - ள்: பாட்டுடைத்தலைவற்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒரு
சீராலே முடிவுபெறப் பாடுவது இலக்கணமாம்; பிரித்து வேறு சொல் முடிபு
கொடுத்துக் கூறல் குற்றமாம்; பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண்
தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது
என்றவாறு.
(43)
விளக்கம்
மலைமுதலிய பத்து அங்கங்களும் தனித்தோ அடையடுத்தோ
ஒரேசீராக அமைக்கப்பட்டமை சான்றோர் செய்யுட்களில் காணப்படும்.
‘புகலாகும் இன்பப் பொருப்பும்’ |
- மலை |
|
‘தேர்இன்பம் நல்கும் திருநாடும்’ |
- நாடு |
|
‘அல்லாது உயர்ந்த அணிநகரும்’ |
- நகர் |
|
‘கூறி நடாத்தும் குரகதமும்’ |
- பரி |
|
‘காய்ந்த சிவஞானக் கடாக்களிறும்’ |
- யானை |
|
‘நார்அகத்துக் கட்டும் நறுந்தொடையும்’ |
- மாலை |
|
‘வந்த நவநாத மணிமுரசும்’ |
- முரசு |
|
‘ஆக்கி அசைத்தருளும்
ஆணையும் |
- ஆணை |
|