|
178 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
கட்டளைக்கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறை ஈறாகக்
கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப்
பாடுவது அகப்பொருட் கோவை என்றவாறு.
(56)
விளக்கம்
| இருவகை முதற்பொருள் |
- நிலன், பொழுது என்பன.
|
| பதினான்குவகைக் கருப்பொருள் |
- ஆரணங்கு முதலியன.
|
| பத்துவகை உரிப்பொருள் |
- புணர்தல் முதலியன ஐந்தும்,
அவற்றின் நிமித்தங்கள் ஐந்தும்.
|
| கைக்கிளை |
- தலைவன்பால் சிறிதுபோது
ஒருதலைக்காமமாகத் தொடங்கி,
பின் ஐந்திணைக் காமமாய்த்
தொடரும் கைக்கிளை.
|
| ஆறிரண்டு உறுப்பு |
- ‘திணையே கைகோள்’
(இ. வி. பொ. 188) என்ற
நூற்பாவில் கூறப்பட்டவை.
|
ஒத்த நூற்பாக்கள்
‘கோவை என்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப.’
- பன். பாட். 341
‘களவினும் கற்பினும் கிளவி வகையால்
திணைநிலை திரியாச் செம்மைத் தாகி
நாட்டிய கலித்துறை நானூறு உரைப்பது
கோட்டம் இல்லாக் கோவை ஆகும்.’
- பன். பாட். 342
‘ஐந்திணை தழுவிய அகநிலைக் கோவை
தந்தநா னூறும்
தாம்கலித் துறையே.’
- பன். பாட். 343
|