பக்கம் எண் :

238
238

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்

          கூறிஅவன் மறுகணையக் காதல் கூர்ஏழ்

     எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று

          இயல்மங்கை பத்தொன்பான் மடந்தை ஐயைந்து

     அழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பான்

          ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்

     தொழஉலாப் போந்தது உலா.’                  

 - சித. பாட். 37

 

     ‘தேவர் மக்களில் சிறந்தோன் ஒருவனாய்

     புரவியும் பாண்டிலும் பொலியப் பவனிவரு

     குழமகன் குலம்முத லியஅடை யாளம்

     குறிப்பின் கலிவெண் பாவில் கழறி

     அவன்தெரு அணைய ஏழ்பரு வத்துக்

     கண்டோர் உவக்கக் கவின்தரு வயதுஏழ்

     பேதை; பன்னொன்று பெதும்பை; பன்மூன்று

     மங்கை; பத்தொன்பான் மடந்தை; ஐயைந்து

     அரிவை; முப்பஃது தெரிவை; நாற்பான்

     பேரிளம் பெண்எனும் பெண்முத லானோர்,

     தொழஉலாப் போந்தது உலாஎனப் படுமே.’          

- பி. ம. 31

 

     ‘உலாவென மலைநதி ஊர்நாடு உயர்மாலை

     குலாவிய பரிகரி கொடிமுரசு உயர்கோல்

     இசைந்த தசாங்கமும் ஏழ்பரு வத்தார்

     வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாய்அக்

     கலிவெண் பாவால் குலமகற் புகழ்தலே.’

                                           - தொ. வி. 260

 

          ‘மிக்க இளமைப் பருவமாய்

     உற்றதலைமகனைப் பிறப்பும் பரம் பரையில்

          உறும் குலம் இன்னான் என்பதாய்

     உயர் தலைமையாய் மாதர் புடைசூழவே பருவம்

          உள பெண்கள் கண்டு தொழவே

     மத்த கயம்மீதும் பரி சிவிகைமீதும் பவனி

          வருதலை வனைத் துதித்து.