பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 109 

251


  

     ‘போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூந்தொடை

     அணிந்து புறப்படும் அடுபடை எழுச்சிச்

     சிறப்பக வலினால் செப்புதல் போர்க்கெழு

     வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே.’                       

- மு. வீ. யா. ஒ. 110

 

     ‘விழுமிய குலமுறை பிறப்புமேம் பாட்டின்

     பலசிறப் பிசையையும் வஞ்சிப் பாவால்

     வழுத்தல் வரலாற்று வஞ்சியாம் என்ப.’   

 ’’    111

 

     ‘போர்க்களத்து இறந்த புரவி நால்வாய்

     மக்கள் உடலையும் வாயசம் கழுகு

     பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்

     களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்

     செருக்கள வஞ்சியாம் செப்புங் காலே.’  

 

- மு. வீ. யா. ஒ. 112

     ‘காஞ்சி புனைந்து கருதார் ஊர்ப்புறம்

     ஊன்றலை உரைப்பது காஞ்சி மாலை.’  

  ’’    113

 

     ‘கோலிய மாற்றார் கோடல் இன்றி

     நொச்சிவேய்ந், தகல்எயில் நோக்கும் திறனை

     வழுத்துதல் நொச்சி மாலை ஆகும்.’     

   ’’    114

     

    'மாற்றார் ஊர்ப்புறம் வளைதர உழிஞை

     வனைந்து காலாள் வளைப்பது கூறல்

     உழிஞை மாலையாம் உணருங் காலே.’      

   ’’    115

 

     ‘தும்பைவேய்ந்து ஒன்னாரொடு சூழ்ந்து பொருவது

     சொல்வது தும்பை மாலை ஆகும்.’  

  ’’    116

 

     ‘மாற்றாரை வென்று வாகைசூ டுவதை

     அகவலினால் அறைவது வாகை மாலை.’   

  ’’    117

 

     ‘யானைவயப் படுத்தி அடக்கின வருக்கும்

     எதிர்பொரும் யானையை ஈர வெட்டி

     அடக்கின வருக்கும் அதட்டிப் பிடித்துச்