பக்கம் எண் :

268
268  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

இ - ள்: சூடுவன பூவும், பூசுவன சாந்தும், உடுப்பன கலையும்,
அலங்கரிப்பன அணியும், வெள்ளையும் சிவப்பும் கருமையும்
பொன்மைநிறமும் ஆம் என்றவாறு.                  

(124)

விளக்கம்

 

     மருட்பாவிற்குக் கருஞ்சிவப்பை விடுத்து வெண்சிவப்பு நிறம்
கொள்ளப்படும் என்பது.

ஒத்த நூற்பாக்கள்

(118 - 124)

 

     ‘அந்தணர் சாதி ஆகிய வெள்ளைக்குச்

     சந்திரன் தன்னொடு தகைமிகு வியாழம்

     கடவுளர்; கார்த்திகை முதல்ஏழ் நாளாம்;

     மீனம் கடகம் தேளே ஓரை;

     சந்தனம் விரைபூ அந்தண் மல்லிகை;

     வெண்மதி நிறனே வண்ணம்; நிலனே

     முல்லை என்னச் சொல்லினர் புலவர்.’  

- பன். பாட். 162

 

     ‘காவலர் சாதி ஆகிய அகவற்கு

     ஆகிய கடவுளர் செங்கதிர் செவ்வாய்;

     நாளே மகம்முதல் நாள்ஏழ் ஆகும்;

     சிங்கம் தனுவே மேடம் ஓரை;

     செஞ்சந் தனம்விரை கமழும் பூவே;

     செந்நிறம் நிறனே; நன்னிலம் குறிஞ்சி.’  

- பன். பாட். 163

 

     ‘நெடுநிலைக் கலியே வணிகர் சாதி

     கடவுளர் சனிபுதன்; கருதிய நாளே

     அனுடம்முதல் ஆறே; ஓரை துலாம்குடம்

     மிதுனம்; சந்தனம் விரைபூச் சண்பகம்;

     பொன்னிறம் நிறனே; நன்னிலம் நெய்தல்.’

                                      - பன். பாட். 164