| 
  
    | 
    பாட்டியல்
- நூற்பா எண் 124   
 | 
     
271 |  
 
      
‘ஆசிரியம் வஞ்சி கலிவெண் பாஎன்று 
    
இம்முறை யால்வைத்து இயம்புங் காலை 
    
மீனம் கடகம் தேளே என்றும் 
    
சிங்கம் தனுவே மேடம் என்றும் 
    
இடபம் கன்னி மகரம் என்றும் 
    
துலாத்தொடு குடமே மிதுனம் என்றும் 
    
ஒட்டிய ராசிமரபு ஓர்தல் நெறியே.’ 
                              
- பி. ம. 48 
  
    
‘மதிகுரு வெள்ளை; செங்கதிர் செவ்வாய் 
    
இன்னகவல்; புகர்வஞ்சி; புந்திசனி கலியே; 
    
கோளமை நாற்பாவும் கொள்ளும் மரபே.’   
                      
- பி. ம. 49 
  
    
‘வெண்பா முதல்வஞ் சிப்பா இறுதி 
    
நான்குபா வினுக்கும் நாளும் கிரகமும் 
    
நிலனும் குலனும் நிறமும் இராசியும் 
    
ஆகிய இருமூன்று இலக்கணப் பகுதி 
    
குறித்தார் முற்றுணர் குரவர் என்ப.’   
                    
  
- மு. வீ. யா. ஒ. 50 
  
    
‘அவற்றுள், 
    
வெண்பா வெண்ணிறம்; விருச்சிகம் கார்த்திகை 
    
முதலிய எழுநாள்; முற்படு விருச்சிகம் 
    
மீனம் இராசி; விப்பிர குலம்; மதி 
    
குருவே கிரகம்; குழுமிய முல்லை 
    
இருநிலம்; மற்றதன் இயல்பென மொழிப.’ 
                         
 ’’     51 
  
     ‘அகவல் செந்நிறம்; அரையர் குலம்; மகம் 
    
பூரம் முதலிய எழுநாள்; மேடம் 
    
சிங்க இராசி; செங்கதிர் செவ்வாய் 
    
கிரகம்; குறிஞ்சி நிலனா கும்மே.’  
                               
 ’’     52 
  
    
‘கலிபொன் நிறம்; குலம் காமரு வணிகம், 
    
அகணி நெடுநிலம்; அனுடம் முதலிய 
    
ஆறுநாள்; மிதுனம் கும்பம் துலாமும் 
    
இராசி; புதன்சனி கிரகம் என்று இயம்புவ.’ 
 
’’     53 |