பாட்டியல்
- நூற்பா எண் 124
|
271 |
‘ஆசிரியம் வஞ்சி கலிவெண் பாஎன்று
இம்முறை யால்வைத்து இயம்புங் காலை
மீனம் கடகம் தேளே என்றும்
சிங்கம் தனுவே மேடம் என்றும்
இடபம் கன்னி மகரம் என்றும்
துலாத்தொடு குடமே மிதுனம் என்றும்
ஒட்டிய ராசிமரபு ஓர்தல் நெறியே.’
- பி. ம. 48
‘மதிகுரு வெள்ளை; செங்கதிர் செவ்வாய்
இன்னகவல்; புகர்வஞ்சி; புந்திசனி கலியே;
கோளமை நாற்பாவும் கொள்ளும் மரபே.’
- பி. ம. 49
‘வெண்பா முதல்வஞ் சிப்பா இறுதி
நான்குபா வினுக்கும் நாளும் கிரகமும்
நிலனும் குலனும் நிறமும் இராசியும்
ஆகிய இருமூன்று இலக்கணப் பகுதி
குறித்தார் முற்றுணர் குரவர் என்ப.’
- மு. வீ. யா. ஒ. 50
‘அவற்றுள்,
வெண்பா வெண்ணிறம்; விருச்சிகம் கார்த்திகை
முதலிய எழுநாள்; முற்படு விருச்சிகம்
மீனம் இராசி; விப்பிர குலம்; மதி
குருவே கிரகம்; குழுமிய முல்லை
இருநிலம்; மற்றதன் இயல்பென மொழிப.’
’’ 51
‘அகவல் செந்நிறம்; அரையர் குலம்; மகம்
பூரம் முதலிய எழுநாள்; மேடம்
சிங்க இராசி; செங்கதிர் செவ்வாய்
கிரகம்; குறிஞ்சி நிலனா கும்மே.’
’’ 52
‘கலிபொன் நிறம்; குலம் காமரு வணிகம்,
அகணி நெடுநிலம்; அனுடம் முதலிய
ஆறுநாள்; மிதுனம் கும்பம் துலாமும்
இராசி; புதன்சனி கிரகம் என்று இயம்புவ.’
’’ 53
|