290
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியஇவ்
எட்டினொடும் காலம் களங்கா ரணமியம்பப்
பட்டானும் அப்பெயரே பன்னு.’
-
வெண். பாட். பொ. 20
‘பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னும் பயனளவும் சொல்லினும் - முன்னைச்
சிறப்பாம் அவற்றுள் சிலஏறி னாலும்
பெறப்படுமா முன்னைப் பெயர்.’
- வெண். பாட். பொ. 21
‘ஈவார் இயல்பவை ஈகைமுறைமை இவை உணர்தல்
ஆவார் திறம்அவை கோள்ஆய ஆதியி னாம்பகுதி
தாவா துரைத்தல் பொதுப் பாயிரம்; தனி வானவரை
ஓவாதிறைஞ்சி அதிகாரம் முன்னர் உரைப்பர்களே.’
- நவ. 67
‘செய்தான் செயப்பட்டது செய்பொருளது செய்திறத்தோடு
எய்தும் பயனே இதன்வழி எல்லை என ஒரெட்டும்
ஐயமில் காலம்அவை காரண மாகப் பத்தொடொன்றும்
மெய்தெரியின் சிறப்புப் பாயிரம் என்ன வேண்டுவரே.’
- நவ. 68
‘நூற்பெயர் நூல்செய்த ஆசிரியன்பெயர் நூல்விளக்கித்
தோற்றிடச் செய்தற்குக் காரணம்யாப்புத் தொன்னூலின்வழி
பாற்படும் எல்லை அறிதல் பயன் இவையும் சிறப்பின்
மேற்படு பாயிரம் என்றாசிரியர்கள் வேண்டுவரே.’
- நவ. 69
129
நூல் இலக்கணம்
890. நூல்எனப் படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி
|