பக்கம் எண் :

பாட்டியல் - நூற்பா எண் 154 

 347

 

மூவறிவு :

 

    கிளை   - ஈயல் மூதாய் போல்வன.

 

    பிறப்பு   - மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் மூவறிவின

              வாகிய பருவம்.

 

நாலறிவு :

 

     கிளை  -  வண்டு தேனீ குளவி முதலாயின.

 

     பிறப்பு  - மக்கட்குழவியும் விலங்கின் குழவியும் நான்கறிவின

              வாகிய பருவம்.

 

ஐயறிவு :

 

     கிளை  -  எண்கால் வருடையும் குரங்கும் போல்வன.

 

     பிறப்பு  -  கிளியும் பாம்பும் முதலாயின.

 

ஆறறிவு :

 

     கிளை  - தேவர் தானவர் முதலாயினார்.

 

     பிறப்பு  -  குரங்கு முதலியவற்றில் சென்ற பிறப்பின் நல்வினை

              யான் மன உணர்வுடையன.

 

    ‘விரிகாஞ்சித் தாதாடி இனக்குயில் விளிப்பவும்

     பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பன்மன் மறைக்கினும்

     கரி பொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி

     எரிபொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன்செய்கோ.’

 - கலி. 34

 

     என்பதனால் மரம் ஓரறிவுயிரேனும் பாவத்துக்கு அஞ்சும் என்பதும்
கொள்க.

 

     ‘தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

     மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்.’     

- அகநா. 4

 

என்பதனால் வண்டின் ஒரு சாரனவற்றிற்குச் செவியறிவும் உண்டு என்பது கொள்க.                                      

154