144. ‘ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவி னானும்
என்றுஇரு வகைத்தே பிசிவரு நிலையே.’
- தொல். பொ. 488
145. ‘நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
மென்மையும் என்றுஇவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப.’
-
தொல். பொ. 489
146. ‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.’
- தொல். பொ. 490
147. ‘எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப.’
- தொல். பொ. 491
149. ‘வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டு ஆக லான.’
- தொல். பொ. 647
150. ‘பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.’
- தொல். பொ. 556
(குழவியும் என்றிவை)
151. ‘சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையலது இலவே.’
- தொல். பொ. 581
|