பக்கம் எண் :

New Page 1

42                    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

152.  ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

     இரண்டறி வதுவே அதனொடு நாவே

     மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

     நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

     ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

     ஆறறி வதுவே அவற்றொடு மனன்என

     நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே.’

                                  - தொல். பொ. 582

 

156.  ‘ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்

     சேவும் சேவலும் இரலையும் கலையும்

     மோத்தையும் தகரும் உதளும் உம்பலும் (அப்பரும்)

     போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்

     யாத்த ஆண்பால் பெயர்என மொழிப.’

                                      - தொல். பொ. 557

 

157.  ‘பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்

     மூடும் நாகும் கடமையும் அளகும்

     மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்

     அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.’

                                      - தொல். பொ. 558

 

158.  ‘புறக்கா ழனவே புல்என மொழிப.’

                                      - தொல். பொ. 640

 

159.  ‘அகக்கா ழனவே மரம்என மொழிப.’

                                      - தொல். பொ. 640

 

160.  ‘தோடே மடலே ஓலை என்றா

     ஏடே இதழே பாளை என்றா

     ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்

     புல்லொடு வரும்எனச் சொல்லினர் புலவர்.’

                                      - தொல். பொ. 641