பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் -முன்னுரை

43


            

152.  ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

     இரண்டறி வதுவே அதனொடு நாவே

     மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

     நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

     ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

     ஆறறி வதுவே அவற்றொடு மனன்என

     நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே.’

                                  - தொல். பொ. 582

 

156.  ‘ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்

     சேவும் சேவலும் இரலையும் கலையும்

     மோத்தையும் தகரும் உதளும் உம்பலும் (அப்பரும்)

     போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்

     யாத்த ஆண்பால் பெயர்என மொழிப.’

                                      - தொல். பொ. 557

 

157.  ‘பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்

     மூடும் நாகும் கடமையும் அளகும்

     மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்

     அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.’

                                      - தொல். பொ. 558

 

158.  ‘புறக்கா ழனவே புல்என மொழிப.’

                                      - தொல். பொ. 640

 

159.  ‘அகக்கா ழனவே மரம்என மொழிப.’

                                      - தொல். பொ. 640

 

160.  ‘தோடே மடலே ஓலை என்றா

     ஏடே இதழே பாளை என்றா

     ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்

     புல்லொடு வரும்எனச் சொல்லினர் புலவர்.’

                                      - தொல். பொ. 641