முதுகாஞ்சி
166. ‘இளமை கழிந்தறிவு மிக்கோர் இளமை
கழியாத அறிவுஇல் மக்கள் தமக்கு
மொழியப் படுவது முதுகாஞ்சி ஆகும்.’
- தொ. வி. 283 உரை.
இயன்மொழி வாழ்த்து
167. ‘இக்குடிப் பிறந்தோர்க்கு எல்லாம் இக்குணம்
இயல்பென்றும் நீயும் அவற்றை உடையை
என்றும்இன் னோர்போல் நீயும்இயல் பாக
ஈஎன்றும் உயர்ந்தோர் எடுத்துமற்று அவனை
வாழ்த்துவ தாக வழுத்துதல் இயன்மொழி
வாழ்த்தாம் என்ன வழுத்தினர் புலவர்.’
- தொ. வி. 283 உரை.
|