பக்கம் எண் :

New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 11

97


    

     ‘மங்கலப் பொருத்தமே கங்கை மலைநிலம்

     கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி

     சீர்புகழ் எழுத்துஅலர் திங்கள் தினகரன்

     தேர்வயல் அமுதம் திருஉலகு ஆரணம்

     நீர்பிற வருமுத னிலைச்சொல் இயல்பே.’                    

  - தொ. வி. 285

 

     ‘மங்கலம் கார்புயல் மாமணி வாருதி

     ஆரணம் உலகுஅலர் அமுதம் தேர்வயல்

     திங்கள் பொன்எழுத்துத் திவாகரன் கரிபரி

     ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’                     

 - மு. வீ. யா. 66

 

மங்கலப் பொருத்த விளக்கம்

 

    ‘அரியதமிழ் பத்துப் பொருத்தங்களைத் தெரிந்து

        அபிதானமாம் பொருத்தம்

    அகரம்முதல் நான்கிற்கும் முந்நீரது ஆகுமே;

        அஆ இரண்டினுக்கும்

     அருமணி கடல்காரு டன்பூவும் எய்துமே

         யாம்; உஊமுதல் ஐந்தினுக்கு

     ஆனபொன் நேமியும், ஒகரம்முதல் மூன்றுக்கும்

         ஆழிநீர் கார்பொருந்தும்,

 

   தரு ககாவின்சீர், கிகீக்குறும்சீர் வேலை

       தானே, குகூச்சொல் ஆகும்,

   சாருமணி கெக்கேகை, கொக்கோ இரண்டினுக்கும்

       சானவியுடன் காருமாம்;

   சகரமொடு சகரஆகாரம் மணிபால் சுதை,

       தருவேழமே சிச்சீக்கு,

   சாற்றிய சுசூமுதல் ஐந்துக்கு உறும்பூவை,

       சாதரூபம்சீர் சொசோ;

 

தெரிஞஞாவுக்கு அமுதம்ஆழி; தத்தாவைத் திருத்

      திகிரியே பொருந்தும்,

    தித்தீ எனும்சொல்லுக்கு நீரே, துத்தூ வைந்து

        செல்வமும், வேலைத் தொத்தோ;