288 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
இத்துணையும் அளவியற்படச் செய்யுளியலுள் கூறிப்
போந்த
செய்யுளின்கண் கிடக்கும் இலக்கணங்களைத்
தொகுத்தும் வகுத்தும்
விரித்தும்கூறி, அளவியற்படாச் செய்யுள் இலக்கணம் கூறுகின்றார்.
என்னை?
‘எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை இல்லன ஆறுஎன
மொழிப.
-தொல். பொ. 476
அவைதாம்,
நூலி னான உரையி
னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான.’
-தொல். பொ.
477
என
ஆசிரியர் தொல்காப்பியனார் எடுத்தோதலான் என்று
உணர்க.
(128)
விளக்கம்
சீயநோக்கு என்றது பொருளதிகாரத்துக் கூறிய
இதனை முன்னருள்ள
எழுத்து, சொல் அதிகாரங்கட்கும்,
பின்னர்க் கூறப்படும் அளவியற்படாத
செய்யுட்களுக்கும்
கொள்வது.
ஒத்த
நூற்பாக்கள்
முழுதும் - தொல். பா. 425
128
பாயிரவகை
889.
பாயிரம்
பொதுச்சிறப் பெனஇரு பாற்றே.
இது
நூன்முகம் என்று சொல்லப்பட்ட பாயிரம் இத்துணைத்து
என்கின்றது.
|