தொல்காப்பிய நூற்பாக்கள்
பாட்டியலில் எடுத்தாளப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள்
37 ஆகும்:
அவை வருமாறு:
128. ‘அவையடக் கியலே அரில்தபத் தெரியின்
வல்லோன் கூறினும் வகுத்தனர் கொண்மின்என்று
எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.’
- தொல். பொ. 425
129. ‘நூலெனப் படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுஅதன் பண்பே.’
- தொல். பொ. 478
‘ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
இனமொழி கிளந்த ஓத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானும்
மூன்றுறுப்பு அடக்கிய பிண்டத் தானும்என்று
ஆங்குஅனை மரபின் இயலும் என்ப.’
- தொல். பொ. 480
‘ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு பொருந்தின்
நூல்என மொழிப நுணங்கு மொழிப்புலவர்.’
- தொல். பொ.
653
|