என்ற இரு நூற்பாவால் விளக்கிக் கூறினார். ஒருமைச்சொல் பன்மை கொண்டு முடிதலின் வழு ஆயினும், ஆண் ஈற்றானும் பெண் ஈற்றானும் வாராமையின் ஆண்பால்முடிபு பெண்பால்முடிபு கோடல் நிரம்பாது எனப் பலர்பால் முடிபுகோடல் அமைதியாதல் தொன்று தொட்டு வந்த மரபானே கொள்ளப்படும் என்பது. ஆர் ஈற்று விரவுப்பெயரும் அஃறிணைப் பெயரும் உயர்திணைப் பெயரும் பலர்பால் வினைகொண்டு முடிதலை ஆசிரியர் தொல்காப்பியனாரும், |
என்ற நூற்பாவானும், அதன்கண் ஒன்றென முடித்தல் என்பதனானும் கொள்ளவைத்தார். ஆர் ஈறு உயர்த்தற் பொருட்டாய் வருதலும், திணை பால் வழுவமைதியும் அவருக்கும் உடன்பாடாதல் அறிக.கடுவன், மூலன், குமரி என்பன பால்காட்டும் ஈற்றான் வந்தனவேனும், நிலத்துக் கருப்பொருள்களாகிய அஃறிணைப் பொருள்களையே உணர்த்தி நிற்றலின் அவை ஈறுபற்றி விரவுத்திணை ஆகாது, பொருள்பற்றி அஃறிணையேயாம் என்பதனைத் தொல்காப்பியனார், |