சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-52217

  குழையள், அணியள், அடிகள் என்பன அள்ஈறு.
குழையாள் உண்டாள் என்பன ஆள்ஈறு.
 

‘எல்லா’ என்பது தோழன்- தோழி என்ற இரு பாலாரையும் விளிக்கும்
பொதுச்சொல்லாய், எல்லாள் என்றோ எல்லான் என்றோ வாராமல் ‘எல்லா’ என்றே
வருதலின், அதனைப் படர்க்கைச் சொல் ஈறுதிரிந்து விளியேற்றது என்னாது, தோழன்
தோழி என்ற இரு பாலாரையும் குறிக்கும் முன்னிலைப் பெயராகவே கொள்ளுதல்
வேண்டும்.
 

  ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.’

தொல்.பொருள்.220

என்ற நூற்பாவின் நச்சினார்க்கினியர் உரையை நோக்குக.

இவர் இதனை தோழியைக் குறிக்கும் முன்னிலைப் பெயராகவே கொண்டார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.’

தொல்.சொல்.144

  ‘வினையினும் பண்பினும்,
நினையத்தோன்றும் ஆள்என் இறுதி
ஆய்ஆ கும்மே விளிவயி னான.’

146

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’

149

  ‘ஈற்றயல் நீடும் லளக்கள் தாம்
........அளபெடை இயல்பாம்.’

நே.சொல்.28

  முழுதும்

நன். 308, தொ.வி. 73

  ‘லளக்களின் ஈற்றயல் நீண்டு விளிக்கும்.’

மு.வீ.பெ. 125