அவைதாம், வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும். இது தொழிற்கு முன்நிற்கும் காரணங்கள் இத்துணை என்று உணர்த்திய முகத்தான், மேல் கூறிப் போந்த வேற்றுமைப் பொருள்களை ஈண்டுத் தொகுத்துக் கூறுகின்றது. இ-ள்: வினையும் வினைமுதலும் செயப்படு பொருளும் நிலமும் காலமும் கருவியும் ஆகிய ஆறும், இன்னதற்காக இதுபயனாக என்று சொல்லப்படும் இரண்டொடும் தொக்குத் தொழிலது முதல்நிலை எட்டாம் என்றும், அவைதாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வரும் என்னும் யாப்புறவு இல்லை, வழங்கின்கண் குன்றத்தகுவன குன்றி வரும் என்றும் சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. |