முதலியன காண்க. மெய்வலியன்- வலியன்-பண்பு. சொல்வல்லன்-வல்லன்-குறிப்பு. வன்மை பண்பாயவழி வலியையும், குறிப்பு ஆயவழி ஒன்றனை வல்லுதலையும் குறிக்கும். அன்மை- இன்மை- வன்மை- என்ற மூன்றும் ஒவ்வொன்றும் பண்பு- குறிப்பு- என்ற இரு பொருளாக வரும்; உண்மை மாத்திரம் ஆ உண்டு என்றாற் போலும் பொருளின் உண்மைத்தன்மை, பண்பு, குறிப்பு என்ற மூன்று பொருள் படுதல் |