சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-19,20,21423

வரலாறு: குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்புழி, ஒன்றும் துணியாமையின் ஐயத்துக்கண் வந்தது.
 

  ‘பிரிவு எண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்குஇழாய்’

கலி.11

என்புழி அசைநிலையாய் வந்தது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘கொல்லே ஐயம்’

தொல்.சொல்.268, மு.வீ.ஒ.15

  முழுதும்

நன்.435


‘மன்ற’ இடைச்சொல்
 

270. மன்றஎன் கிளவி தேற்றம் செய்யும்.
 

இது மன்ற என்பது பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: மன்ற என்னும் இடைச்சொல் தெளிவுப் பொருண்மையை உணர்த்தும்
என்றவாறு..
 

  வரலாறு:
‘கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே’

நற்.34

எனவரும். மடவையே என்றவாறாம். 20
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்

தொல்.சொல்.265

  ‘மன்றக் கிளவி தெளிவை விளக்கும்’

மு.வீ.ஒ.12


‘தஞ்சம்’ இடைச்சொல்
 

271. தஞ்சக்கிளவி எண்மை பொருட்டே.
 

இதுவும் அது.

இ-ள்: தஞ்சம் என்னும் இடைச்சொல் எளிமைப் பொருண்மையை உடைத்து.