| ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தும் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல்’ | தொல்.சொல்.297,மு.வீ.ஒ.25 |
|
| ‘ஒண்பேர் வினையோடும் தோன்றி உரிச்சொலிசை பண்பு குறிப்பால் பரந்தியலும்- எண்சேர் பலசொல் ஒருபொருட்க ஏற்றும் ஒரு சொல்தான் பலபொருட்கு ஏற்பவும் பட்டு’. | நே.சொல்.56 |
|
| ‘பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்’ | நன்.442 |
|
| ‘மண்டலத் துப்பதி னெண்தே சிகச்சொல் வடசொலெனப் பண்டை வழக்கொடு பாராட்டு உரிச்சொல் பல பொருட்கே ஒண்டொடி யாய்பின் ஒருமொழி யாய்மற்று ஒரு பொருட்கே கொண்டியல் பன்மொழி யாய்ச்சத்தி ஆற்றலும் கொண்டெழுமே’. | பி.வி.18 |
|
| ‘உரிச்சொல் என்ப உரியபல் குணச்சொல் ஆதிப் பெயர்வினை அணைந்து வருமே.’ | தொ.வி.138 |
குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் (281, 282) தாம்பலவாய் நின்று ஒரு பொருள் உணர்த்துவன:
|
281 | உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள ஆகலும் செல்லல் இன்னல் இன்னாமை செப்பலும் அலமரல் தெருமரல் சுழற்சி சாற்றலும் | |