சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

480 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பசப்பு நிறனாகும்.’
‘சாயல் மென்மை.’
‘வெம்மை வேண்டல்.’
‘வாள் ஒளியாகும்.’
‘இசைப்பு இசையாகும்.’
302
325
334
367
மு.வீ.ஒ.33, 308
 
‘வம்பு
நிலையின்மை, பொன்மை நிறம்பசலை என்ப
விலைநொடை வாள் ஒளியாம் வேறு.’
நே.சொல்.87
   
 
  ‘வெம்மை விருப்பாம் வியலகல மாகும்அரி
ஐம்மைஎய் யாமை அறியாமை- கொம்மை
இளமை நளிசெறிவாம் ஏ-ஏற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து’
நே.சொல்.59
 
‘புரைஉயர் பாகும் புனிறீன் றணிமை
.... .... .... குரைஒலியாம்
சொல்லும் கமமும் துவன்றும் நிறைவாகும்
எல்லும் விளக்கம் எனல்.’
நே.சொல்.60


உரிச்சொற்குரியதொரு மரபு:
 

291. பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம்பு இன்றே.
 

இஃது உணராதவற்றை உணர்ந்தவை சார்த்திப் பொருள் உணர்த்துங்கால் படும் முறைமை கூறுகின்றது.

இ-ள்: ஒரு சொல்லை ஒரு சொல்லால் பொருள் உணர்த்தியவழி, அப்பொருள் உணர்த்தவந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருட்குப் பொருள் தெரியுமாயின், மேல்வருவனவற்றிற்கு எல்லாம் ஈது ஒத்தலின் அவ்வினாஇறை வரம்பு இன்றி ஓடும்; அதனால் பொருட்குப் பொருள் தெரியற்க என்றவாறு.

ஒரு சொற்குப் பொருள் உரைப்பது பிறிது ஒரு சொல்லான் அன்றே; அச்சொல் பொருளும் அறியாதானை உணர்த்துமாறு என்னை எனின், அது வருகின்ற
சூத்திரத்தால் பெறப்படும்.