இது மொழிப் பொருள் உணர்த்துதற்குக் காரணம் உண்டு என்கின்றது. இ-ள்: உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருள் ஆதல் வரலாற்று முறைமையால் கொள்வதல்லது, அவை அப்பொருள் ஆதற்குக் காரணம் விளங்கத் தோன்றா என்றவாறு. பொருளொடு சொற்கு இயைபு இயற்கை ஆகலான், அவ்வியற்கை ஆகிய இயைபால் சொல் பொருள் உணர்த்தும் என்ப. ஒரு சாரார் பிற காரணத்தானும் |